இலங்கை அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வுக்கு பொது மக்கள் நேரில் சென்று பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான பகுதி மூடப்பட்டுள்ள அதேவேளை ஊடக நிறுவன பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றும் தமது பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்ற அதேவேளை, முறைப்படி நம்பிக்கையில்லா பிரேரணை நடாத்தப்பட வேண்டும் என மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றமையும் இரு தடவைகள் மஹிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளமையை மைத்ரி ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment