ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியது சட்டரீதியாக செல்லுபடியாகாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதன் மூலம் மைத்ரியின் செயற்பாடு தவறென்பதை நிரூபிக்கப் போவதாக தெரிவிக்கிறார் கயந்த கருணாதிலக்க.
அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர், செய்தியாளர்களுக்கு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன், ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் அங்கு யதார்த்தம் புரியும் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, இவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு சில வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment