யாரோ செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டேன்: பசில்! - sonakar.com

Post Top Ad

Sunday 1 July 2018

யாரோ செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டேன்: பசில்!


தூய குடிநீர் கேட்டுப் போராடிய ரத்துபஸ்வல மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்து 20க்கு மேற்பட்டோர் படுகாயமுற்ற விவகாரத்துக்கு தான் அங்கு நேரடியாகச் சென்று மக்களிடம் மன்னிப்புக் கோரியதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.


இது போன்ற சம்பவங்கள் பெரமுனவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்ற அவர், இராணுவத்தினர் வடக்கிலும் இப்படித்தான் நடந்து கொண்டார்களா என தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் தெரிவிக்கிறார்.

அத்துடன் குறித்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தனக்குத் தெரியாது எனவும் யாரோ செய்த பிழைக்குத் தான் நேரடியாகச் சென்று மன்னிப்புக் கோரியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment