சம்பூர்: 66 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Friday 13 July 2018

சம்பூர்: 66 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!


சம்பூர் கடற்பகுதியிலிருந்து 21 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 66 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கடற்கரைப் பகுதியில் போதைப் பொருள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடலிலேயே இவ்வாறு பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மொத்த பெறுமதி 66 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட போதைப் பொருளே இவ்வாறு புதைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment