மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதான பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பாலிசேனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் கைதான குறித்த இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் நிலையில் இம்முறை அடுத்த மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அர்ஜுன் மகேந்திரன் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment