பாதாள உலக நடவடிக்கைகளினால் நாடு பயங்கர சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மஹிந்த ராஜபக்ச, அரசியல்வாதிகளின் தயவிலேயே பாதாள உலகம் இயங்கி வருவதாக தெரிவிக்கிறார்.
விகாரை வளாகத்துக்குள் புகுந்து பௌத்த துறவியை சுடும் அளவுக்கு பாதாள உலகத்தினர் ஆளுமை விரித்தாடுவதாகவும் இது நாட்டுக்கு ஆபத்தானது எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார ரீதியாகவும் சீர்குலைந்து போயுள்ள நிலையில் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment