வவுனியாவில் வைத்து வீடொன்றிலிருந்து கடத்தப்பட்ட எட்டு மாத கைக்குழந்தை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் வாழும் தனது கணவரின் ஏற்பாட்டிலேயே இந்த கடத்தல் இடம்பெற்றிருக்கும் என குழந்தையின் தாய் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் பொலிசார் தேடலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது தமக்குக் கிடைத்த தகவல்களின் பின்னணியில் குழந்தையை மீட்டுள்ளதுடன் கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment