கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நியமிக்கப்பட்டால் தமக்கெதுவித ஆட்சேபனையுமில்லையெனவும் முன் நின்று அவரது வெற்றிக்காக உழைக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.
ராஜபக்ச சகோதரர்கள் இடையே கருத்து முரண்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் உண்மையில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், சரியான தருணத்தில் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவிடமே அதிகாரம் இருக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு சாரார் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment