மகேந்திரன் இருக்குமிடம் எனக்கும் தெரியாது: ரணில் - sonakar.com

Post Top Ad

Wednesday 6 June 2018

மகேந்திரன் இருக்குமிடம் எனக்கும் தெரியாது: ரணில்


அர்ஜுன் மகேந்திரன் இருக்குமிடம் தனக்கும் தெரியாது என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


நாடாளுமன்றில் இது தொடர்பில் ஜே.வி.பி தலைவர் வினவிய போதே இவ்வாறு பதிலளித்த ரணில், நாட்டை விட்டு வெளியேறும் போது தன்னைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட மகேந்திரன் அதன் பின் இதுவரை தொடர்பு கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.


இலங்கையில் பாரிய மோசடிகளை செய்த நபர்கள் பலர் வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஜே.வி.பி தலைவர் மேலும் வினவியிருந்த நிலையில் மகேந்திரன் குறித்து ரணில் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment