கடந்த வருடம் முதலே இந்திய வர்த்தகரிடம் லஞ்சப் பேரம் நடாத்தி வந்த குற்றச்சாட்டிருந்த நபரான ஐ.கே. மகநாம ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியானதெப்படி என கேள்வியெழுப்பியுள்ளது மனித உரிமைகளுக்கான மையம்.
56 கோடி ரூபா லஞ்சம் கோரியது தொடர்பில் முன்னதாகவே குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு எழுந்துள்ளதாகவும் எனினும் அரசின் உயர் மட்ட பதவியொன்றுக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை உருவாக்குவதாகவும் அவ்வமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளும் இடம்பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் ஜனாதிபதி செயலக பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment