மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து சரத் பொன்சேகா வருத்தம் தெரிவித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரியதாக தெரிவித்திருந்தார்.
எனினும், தான் அவ்வாறு மன்னிப்பு எதுவும் கோரவில்லையென மறுதலித்துள்ளார் சரத் பொன்சேகா.
தமது சந்திப்பின் போது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அமைச்சு விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் தான் மன்னிப்புக் கோரவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment