ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 9 May 2018

ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு


இந்திய வர்த்தகரிடம் 20 கோடி லஞ்சப் பேரம் நடாத்தி அதில் 2 கோடி ரூபாய் முற்பணம் பெற்ற வேளையில் கையும் களவுமாக அகப்பட்ட ஜனாதிபதி செயலக பிரதானி மகநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்கவின் விளக்கமறியில் நீடிக்கப்பட்டுள்ளது.


கடந்த வருடம் மே மாதமே இது தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி செயலக பிரதானியாகவும் குறித்த நபர் பதவி நியமனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதங்களாகக் காத்திருந்து இருவரையும் கைது செய்ததாக ல.ஊ.ஆ குழு முன்னர் தெரிவித்திருந்தது. எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment