டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தபடி நாளைய தினம் ஜெரூசலத்தில் அமெரிக்க தூதரகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளது.
தூதரகத்திற்கான வழிகாட்டும் பதாதை கடந்த ஒரு வாரமாக ஜெரூசலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளைய திறப்பு விழா இடம்பெறவுள்ளமையும், இதில் அமெரிக்காவிலிருந்து முக்கியஸ்தர்கள் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
பல உலக நாடுகள் தமது தூதரகத்தை டெல் அவிவில் இயக்கி வருகின்ற நிலையில் ஜெரூசலத்தை இஸ்ரேலுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சியில் ட்ரம்ப் ஒரு தலைப்பட்சமாக இம்முடிவை அறிவித்துள்ளார். இதேவேளை கிழக்கு ஜெருசலத்தை பலஸ்தீனத்தின் தலை நகராக அங்கீகரிப்பதாக இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவு அமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
எனினும், ட்ரம்பின் திட்டப்படியே தூதரகம் திறக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment