மத்திய வங்கி முடிந்து சமுர்தியில் கண் வைக்கிறார்கள்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday 8 May 2018

மத்திய வங்கி முடிந்து சமுர்தியில் கண் வைக்கிறார்கள்: மஹிந்த


மத்திய வங்கியைக் கொள்ளையடித்து முடிந்துவிட்டதால் இப்போது சமுர்தி வங்கியில் கண் வைக்கிறார்கள் என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.


ஊழல்வாதிகள் என முத்திரை குத்தப்பட்டு பதவி நீக்கப்பட்ட மஹிந்த அரசுக்கு இணையாக மத்திய வங்கி ஊழலில் ஐக்கிய தேசியக் கட்சியினர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சமுர்தி வங்கியை மத்திய வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment