ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய அமைச்சரவை: ராஜித - sonakar.com

Post Top Ad

Sunday 22 April 2018

ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய அமைச்சரவை: ராஜித


தற்போது லண்டன் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பியதும் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.


அமைச்சரவை முழு அளவில் மாற்றப்படும் என பல தடவைகள் தெரிவிக்கப்பட்டதுடன் கடந்த இரு வாரங்களாக திகதி குறிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி நாடு திரும்பியமும் மாற்றங்கள் அறிவிக்கப்படும் எனவும் அது முழுமையான மாற்றமாக இருக்கும் எனவும் ராஜித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment