அம்பாறையையடுத்து திகன மற்றும் மத்திய மாகாணத்தில் முஸ்லிம் விரோத வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் நடந்து கொள்வதைக் கண்டித்தும் சட்ட,ஒழுங்கை நிலை நாட்ட வலியுறுத்தியும் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் முஸ்லிம்கள் நாளை மறுதினம் புதன் கிழமை (7ம் திகதி) லண்டன், இலங்கைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.
ஐக்கிய இராச்சியம், புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களுக்கான அமைப்பினால் (SLMDI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு மதியம் 12 மணி முதல் 4 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட, ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அரசாங்கம் இவ்விடயத்தில் துரிதமாக செயற்படாதது மாத்திரமன்றி அம்பாறையில் போன்றே பாதுகாப்பு படையினர் பார்த்திருக்கவே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்து வரும் நிலையில் புலம் பெயர்ந்த வாழும் மக்கள் தம் சமூகத்துக்காக அரசுக்கு நிர்ப்பந்தத்தை உருவாக்கும் வகையில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment