விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும்: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Saturday 17 March 2018

விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும்: ஹக்கீம்



இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் ஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நிர்மாணிக்கப்பட்ட 22 வீடுகள் உள்ளடங்கிய ஏறாவூர் 'மர்கஸுல் ஹிதாயா' வீட்டுத்திட்டத்தை இன்று (17) பயனாளிகளிடம் கைளித்த பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;


சிறுபான்மை மக்கள் தங்களது எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் இந்த நாட்டில் வாழ்ந்துவருகின்றனர். அச்சத்துடனும், பீதியுடனும் இருந்த முஸ்லிம்கள் அண்மையில் நடைபெற்ற சம்பவங்களினால் ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் இருக்கின்றனர். நடந்துமுடிந்த அழிவுகளுக்கு இனவாதிகள் பொறுப்புக்கூறுவதைவிட அரசாங்கம் முக்கியமாக பொறுப்புக்கூறவேண்டும்.

கண்டி, அம்பாறை போன்றவற்றில் நடைபெற்ற இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கின்றபோது, தங்களது நஷ்டயீடு பெற்றுத்தருமாறுதான் கூறுகின்றனர். இழந்த முழுவதையும் மீளப்பெறுகின்ற வகையில் வழங்கப்படும் நஷ்டயீடு இருக்கவேண்டும் என்பதில் அரசியல் தலைமைகளாகிய நாங்கள் தீவிர கவனம் செலுத்திவருகிறோம்.

-SLMC

No comments:

Post a Comment