அரசு கவிழ்வது உறுதி: மஹிந்த நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Saturday 17 March 2018

அரசு கவிழ்வது உறுதி: மஹிந்த நம்பிக்கை!


அரசாங்கம் விரைவில் கவிழும் என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மஹிந்த,  அரசு கவிழ்வது உறுதியென தெரிவிக்கிறார்.


உள்ளூராட்சி மன்ற தோல்வியின் பின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மாற்றம் வரவேண்டும் எனவும் ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment