ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! - sonakar.com

Post Top Ad

Monday 19 March 2018

ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!




கொழும்பு, ஆமர் வீதி பகுதி, மெசன்ஜர் வீதியில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தெமட்டகொடயைச் சேர்ந்த  42 வயது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


அத்துடன் குறித்த நபருடன் பயணித்த அவரது மனைவி காயத்துக்குள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் கூட்டாட்சி அரசில் தாராளமாக பாதாள உலக கோஷ்டி மோதல்களும் கொலைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment