கண்டி வன்முறை தொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆராய்வதற்கென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உதவியில் வன்முறையாளர்கள் சிலரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
வன்முறையைத் தூண்டிய அமித் வீரசிங்க குழு அவசர கால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை பொலிசில் முறையிடுமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை பல வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்ட காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment