தர்கா நகர்: தாக்குதல் நடாத்த சுற்றித் திரிந்த இருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday 10 March 2018

தர்கா நகர்: தாக்குதல் நடாத்த சுற்றித் திரிந்த இருவர் கைது!


தர்கா நகர், அதிகாரி கொட பகுதியில் வீடொன்றை நோக்கி பெற்றோல் குண்டு வீசப்பட்டிருந்த அதேவேளை பிரதான வீதியில் கற்களுடன் தாக்குதல் நடாத்த சுற்றித்திரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, திகன உட்பட சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் நடாத்திய இனவாதிகள் தென்பகுதியில் ஆங்காங்கு முயற்சி செய்து வருகின்றனர்..


இந்நிலையில், முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் இனவாத அச்சத்தை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment