கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் இருந்த நிலையிலேயே முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது வீடு எரியூட்டப்பட்ட நிலையில் அதற்குள் சிக்கி உயிரிழந்திருந்தார். அது மாத்திரமன்றி ஊரடங்கின் போதே கட்டுகஸ்தொட்ட உட்பட பல பகுதிகளில் வீடுகள், வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் தற்சமயம் திகன, அளுத்வத்தை பகுதியில் அச்ச சூழல் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment