கடைசி நாள் வரை ஆட்சியைத் தொடர்வோம்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Tuesday 25 April 2023

கடைசி நாள் வரை ஆட்சியைத் தொடர்வோம்: பிரசன்ன

 



நடைமுறை அரசுக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தின் பயனை கடைசி நாள் வரை அனுபவிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.


இதற்கேற்றவாறு, மொட்டுக் கட்சியின் 126 உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், கைவிடப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.


உள்ளூராட்சித் தேர்தலை நடாத்தாதிருக்கும் அரசாங்கம், நாடாளுமன்றைக் கலைப்பதையும் தவிர்ப்பதற்கு இதுவே ஒரே தீர்வென்பதுடன், இதனூடாக நேரடியாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment