வேலையில்லா வாலிபர்களுக்கு ஆடு வளர்ப்பு திட்டம் - sonakar.com

Post Top Ad

Monday 17 April 2023

வேலையில்லா வாலிபர்களுக்கு ஆடு வளர்ப்பு திட்டம்

 



கிராமப்புற பகுதியில் வேலையற்ற இளைஞர்களை ஆடு வளர்ப்பில் ஈடுபடுத்தும் வகையில் சுமார் 70,000 உயர் தர ஆடுகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர.


150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், ஆட்டுப் பால் மற்றும் தோல் சார்ந்த பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.


இதனூடாக கூடுதல் வருமானத்துக்கான வழியை உருவாக்கலாம் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment