தபால் மூல வாக்களிப்பு 'திட்டமிட்டபடி' இல்லை - sonakar.com

Post Top Ad

Thursday 23 March 2023

தபால் மூல வாக்களிப்பு 'திட்டமிட்டபடி' இல்லை

 



மார்ச் மாதம் தேதி குறித்து, பின் அதிலிருந்தும் ஏப்ரல் மாதம் 25ம் திகதிக்கு உள்ளூராட்சித் தேர்தல்களை தள்ளிப் போட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது.


இந்நிலையில், அடுத்த வாரம் (மார்ச் 28 முதல் 31) வரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு இடம்பெறாது என இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பணம் இல்லாமல் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க முடியாது என அரசாங்க அச்சகம் தெரிவித்து வருகின்ற அதேவேளை, தேர்தலை நடாத்த பணம் இல்லையென அரசாங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment