கோட்டாபயவிடம் மூன்று மணி நேர விசாரணை - sonakar.com

Post Top Ad

Tuesday 7 February 2023

கோட்டாபயவிடம் மூன்று மணி நேர விசாரணை

 



ஜனாதிபதி மாளிகைக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்த பெருந்தொகை பணம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை நடாத்தியுள்ளனர் குற்றவியல் புலனாய்வு பிரிவினர்.


மூன்று மணி நேரம் இடம்பெற்றுள்ள இவ்விசாரணையின் போது குறித்த விவகாரம் தொடர்பிலான கோட்டாபயவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி மாளிக்கைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பணத்தினை கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment