மார்ச் 9 முதல் நாடு 'புதிய திசையில்' பயணிக்கும்: அநுர - sonakar.com

Post Top Ad

Saturday 28 January 2023

மார்ச் 9 முதல் நாடு 'புதிய திசையில்' பயணிக்கும்: அநுர

 



எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புதிய திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அநுர குமார திசாநாயக்க.


தேர்தலில் இடதுசாரி தரப்பு பாரிய வெற்றியைப் பெறும் என தொடர்ச்சியான நம்பிக்கை நிலவி வருகிறது. இப்பின்னணியில், ஜே.வி.பியின் அரசியல் நகர்வுகள் மக்கள் பங்களிப்பை வெகுவாக எதிர்பார்த்து அமைந்து வருகிறது.


கடந்த காலங்களில். மக்கள் அரசியல் ரீதியாக துன்பப்படும் போது ஜே.வி.பியின் கருத்துக்களால் கவரப்படுகின்றமையும் தேர்தல் காலங்களில் பெருந்தேசியக் கட்சிகளின் 'வாக்குறுதிகளால்' கவரப்பட்டு வாக்குகளை மாற்றிக் கொள்கின்றமையும் நடந்தேறி வருகின்றமை நினைவூட்டத்தக்கது.            

No comments:

Post a Comment