அதிக திருட்டு நடக்கும் நாடுகள்: முதல் பத்தில் 'இலங்கை' - sonakar.com

Post Top Ad

Tuesday 13 December 2022

அதிக திருட்டு நடக்கும் நாடுகள்: முதல் பத்தில் 'இலங்கை'

 



உலகில் அதிக திருட்டு நடக்கும் நாடுகளுள் முதல் பத்தில் இலங்கையும் அடங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.


புதிய 'சுதந்திர' கட்சியை உருவாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்திரிக்கா, குருநாகலில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


2000 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும் இலங்கை உலக மட்டத்தில் தவறான காரணங்களுக்காகவே அறியப்படுவதாகவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment