சமூக வலைத்தள 'தணிக்கை' கோரும் பெரமுன MP - sonakar.com

Post Top Ad

Friday 25 November 2022

சமூக வலைத்தள 'தணிக்கை' கோரும் பெரமுன MP

 



சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகளே அதிகம் இருப்பதாகவும் பதிவுகளுக்கு தணிக்கை அவசியப்படுவதாகவும் குரல் எழுப்பியுள்ளார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோறள.


நாடாளுமன்றில் அவரது உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், பெண்களின் பெயர்களில் ஆண்களே அதிகம் உலவுவதாகவும் அதே போன்று ஆண்களின் பெயர்களில் பெண்களும் சமூக வலைத்தள உபயோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


பெரமுன அரசுக்கெதிரான கருத்துப் பகிர்வில் சமூக வலைத்தளங்களின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment