பெரமுன சொல்வதைத் தான் ரணில் செய்ய வேண்டும்: சனத் - sonakar.com

Post Top Ad

Friday 19 August 2022

பெரமுன சொல்வதைத் தான் ரணில் செய்ய வேண்டும்: சனத்

 



ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியிருப்பது பொதுஜன பெரமுன என்ற அடிப்படையில் கட்சியின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை ரணிலுக்கு இருப்பதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த.


நிபந்தனையடிப்படையில் பிரதமராவதற்கு ரணில் மாத்திரமே முன் வந்திருந்ததாலேயே அவரை பிரதமராக்கியதாகவும் பின்னர் ஜனாதிபதியாக்கியதாகவும் நிசாந்த விளக்கமளித்துள்ளார்.


ஆளுங்கட்சி தொடர்ந்தும் பலத்துடனேயே இருப்பதாகவும் அடுத்த தேர்தல் வரை ஆளுமை தொடரும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment