ரணிலையும் விரட்டாமல் ஓய மாட்டோம்: அரகலய - sonakar.com

Post Top Ad

Monday, 18 July 2022

ரணிலையும் விரட்டாமல் ஓய மாட்டோம்: அரகலய

 



கோட்டாபயவைப் போன்று ரணில் விக்கிரமசிங்கவையும் விரட்டாமல் மக்கள் போராட்டம் ஓயாது என தெரிவிக்கின்றனர் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடிய வேளையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர்கள், ரணில் ஜனாதிபதியாக தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என சூளுரைத்துள்ளனர்..


இந்நிலையில், இன்று முதல் மீண்டும் நாட்டில் அவசர கால சட்டம் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment