சட்டவிரோத எரிபொருள் விற்பனை; 68 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 12 April 2022

சட்டவிரோத எரிபொருள் விற்பனை; 68 பேர் கைது

 


சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டதன் பின்னணியில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பல இடங்களில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளிக்கப்படுகிறது.


இப்பின்னணியில், 8025 லீற்றர் பெற்றோலும் 726 லீற்றர் டீசலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment