பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - sonakar.com

Post Top Ad

Sunday 13 March 2022

பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

 


நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளில் முற்றாக அதிருப்தி காணும் எதிர்க்கட்சி, நாடாளுமன்றுக்கு வருகை தராமல், கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் தவிர்ப்பதையும் கடுமையாக சாடி வருகிறது.


இதேவேளை, பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகள் நாட்டை முழுமையாக படுகுழியில் தள்ளி விடும் என பதவி நீக்கப்பட்ட விமல் மற்றும் கம்மன்பில தரப்பினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment