அநுராதபுரத்தில் SJB பொதுக் கூட்டம் - sonakar.com

Post Top Ad

Monday 28 February 2022

அநுராதபுரத்தில் SJB பொதுக் கூட்டம்

 


அநுராதபுரத்தில் பெரமுன கூட்டமொன்று இடம்பெற்று முடிவுற்றுள்ள நிலையில் மார்ச் 29ம் திகதி தாமும் அங்கு பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.


எந்த தடை வந்தாலும் அதைத் தாண்டி பொதுக் கூட்டத்தை நடாத்தப் போவதாகவும் மக்கள் சக்தியை ஒன்று திரட்டும் இப்பணி கட்டாயம நடைபெறும் எனவும் கட்சி சார்பில் நலின் பண்டார சூளுரைத்துள்ளார்.


நாடு முழுமையாக இருண்ட யுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment