ஜனாதிபதியை கை விட்டு போக மாட்டேன்: வாசு - sonakar.com

Post Top Ad

Thursday 30 December 2021

ஜனாதிபதியை கை விட்டு போக மாட்டேன்: வாசு

 



யுகதனவி திட்டத்தை எதிர்ப்பதன் விளைவாக வாசு - விமல் கூட்டணியை பதவி விலகுமாறு பெரமுனவில் எதிர்ப்பு அதிகரித்துள்ள அதேவேளை எஹலியகொட பகுதியில் வாசுதேவ நானாயக்கார பொது மக்களினால் கூச்சலிட்டு விரட்டப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது.


எனினும், ஜனாதிபதியை கைவிட்டுச் செல்லும் நோக்கம் எதுவும் இல்லையென தன்நிலை விளக்கமளித்துள்ளார் வாசுதேவ.


இதேவேளை, யுகதனவியை எதிர்ப்பவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை விட்டு விலக வேண்டும் என நாமல் ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment