துப்பாக்கிச் சூடு பொலிஸ் நபருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Saturday 25 December 2021

துப்பாக்கிச் சூடு பொலிஸ் நபருக்கு விளக்கமறியல்

 


திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தி, நால்வரைக் கொலை செய்த பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


விடுமுறை வழங்கப்படாத கோபத்திலேயே குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக தற்போதைய அளவில் விளக்கமளிக்கப்பட்டுள்ள போதிலும் மேலதிக விசாரணைகளை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர், பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த உள்ளிட்ட நான்கு பொலிஸ் ஊழியர்களே இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

No comments:

Post a Comment