பொலிஸ் காவலிலிருந்த முன்னாள் பி.ச.உ மரணம்! - sonakar.com

Post Top Ad

Saturday 18 December 2021

பொலிஸ் காவலிலிருந்த முன்னாள் பி.ச.உ மரணம்!

  


போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்ப்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இன்று காலை கைது செய்யப்பட்டு ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 62 வயதான பிரேமதிலக்க அமரவீர உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment