மாகாண சபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Saturday 16 October 2021

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள்: மைத்ரி

 


மாகாண சபை தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாது உடனடியாக நடாத்த வேண்டும் என அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவர், மக்கள் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் இதற்கான உடனடி தீர்வு இருப்பதாக தாம் நம்பவில்லையெனவும் தெரிவிக்கிறார்.


ஆட்சியின் பங்காளிகளாக இருக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியினர் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றமையும் தாம் தனித்தே போட்டியிடப் போவதாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment