ரிசாத் குடும்பத்தாரின் 'மனநல'த்தை பரிசோதிக்க வேண்டும்: அமரவீர - sonakar.com

Post Top Ad

Monday 2 August 2021

ரிசாத் குடும்பத்தாரின் 'மனநல'த்தை பரிசோதிக்க வேண்டும்: அமரவீர

 


வீட்டில் பணிபுரிய வரும் பெண்களை துன்புறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள ரிசாத் குடும்பத்தினரை மன நல பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.


பரவலாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் முழுக் குடும்பத்தையும் பரிசோதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


அண்மையில் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மரணித்ததையடுத்து ரிசாத் பதியுதீன் குடும்பத்தினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும், ரிசாத் தரப்பினர் இக்குற்சச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment