சிறுவர் துஷ்பிரயோகம்: கண்டி நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday 31 July 2021

சிறுவர் துஷ்பிரயோகம்: கண்டி நபர் கைது!

 


சிறுவர் பாலியல் நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்தின் பின்னணியில் கண்டி நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


ஜுன் முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் பல ஆயிரம் காணொளிகள், படங்கள் தரவேற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து இது தொடர்பில் விசேட விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.


இப்பின்னணியிலேயே கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment