இலங்கையரை ஏற்றிச் செல்வதை தவிர்க்கும் எமிரேட்ஸ் - sonakar.com

Post Top Ad

Sunday 4 July 2021

இலங்கையரை ஏற்றிச் செல்வதை தவிர்க்கும் எமிரேட்ஸ்

 


தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையில், அமீரக அரச விதிகளுக்கேற்ப எதிர்வரும் 15ம் திகதி இலங்கை, இந்தியா மற்றும் பங்களதேஷ் பயணிகளை ஏற்றிச் செல்வதில்லையென அறிவித்துள்ளது எமிரேடஸ் நிறுவனம்.


கடந்த 14 நாட்களுக்குள் மேற்காணும் நாடுகள் ஊடாக பயணித்தவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் ஏற்றிச் செல்லப்படாவிடினும் கொரோனா விதிகளைப் பேணி வரும் அமீரக பிரஜைகளுக்கு நாடு திரும்ப அனுமதிப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ள போதிலம், தற்போது டெல்டா வகை கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment