அரச நிறுவனங்களுக்கு செலவுக் கட்டுப்பாடு - sonakar.com

Post Top Ad

Saturday 24 July 2021

அரச நிறுவனங்களுக்கு செலவுக் கட்டுப்பாடு

 


நாட்டில் நிலவி வரும் பொருளாதார சிக்கல் மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அடுத்த ஆறு மாத காலத்துக்கு அரச நிறுவனங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.


அரச நிறுவனங்களின் மேலதிக செலவீனங்களை முற்றாகக் குறைப்பதுடன் இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய ஊழியர்கள் இணைப்பதையும் நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் திறமை பசில் ராஜபக்சவுக்கே இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment