போலி PCR சான்றிதழுடன் பெண் கைது - sonakar.com

Post Top Ad

Friday 18 June 2021

போலி PCR சான்றிதழுடன் பெண் கைது

 


போலி சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பிரான்ஸ் பயணிக்க முனைந்த 25 வயது பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்லும் விமானத்தில் குறித்த பெண் பயணிக்க முனைந்த வேளையில் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதில் போலி பி.சி.ஆர் சான்றிதழும் காணப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


யாழ் - மாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு சி.ஐ.டியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment