பிக்கு வேடம் தரித்து நிதி திரட்டிய நபர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 1 June 2021

பிக்கு வேடம் தரித்து நிதி திரட்டிய நபர் கைது

 


மீரிஹன பகுதியில் பௌத்த பிக்கு போன்று வேடமிட்டு நிதி மற்றும் பொருள் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி இந்நபர் செயற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சந்தேகத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் பௌத்த துறவி போன்று வேடமிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment