வழமைக்குத் திரும்பும் அரச சேவைகள் - sonakar.com

Post Top Ad

Monday 8 March 2021

வழமைக்குத் திரும்பும் அரச சேவைகள்

 


இன்று முதல் அனைத்து அரச சேவைகளையும் வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவலின் பின்னணியிலான சுகாதார கட்டுப்பாடுகள் ஏப்ரல் இறுதி வரை அமுலில் இருக்கின்ற நிலையில் தற்போது முதல் அனைத்து அரச சேவைகளையும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் வாரத்தில் இரு நாட்கள் விசேட விடுமுறை தினங்களாக இருக்கும் எனவும் தொடர்ந்தும் சுகாதார கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment