சுகாதார ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து - sonakar.com

Post Top Ad

Thursday 4 March 2021

சுகாதார ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து

 


கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்துவதற்காக சுகாதார ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


வஸ்கடுவ, கொஸ்கஸ் சந்தி ரயில்வே கடவையில் இடம்பெற்ற இவ்விபத்தில் பேருந்தின் சாரதி கடுங் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர் பிரிசோதனையை மேற்கொள்ளவே 12 பேர் கொண்ட சுகாதார ஊழியர்கள் பயணித்ததாக விளக்கமளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment