USA: இலங்கையின் முகவராக செயற்பட்ட நபருக்கு சிறை - sonakar.com

Post Top Ad

Tuesday 23 February 2021

USA: இலங்கையின் முகவராக செயற்பட்ட நபருக்கு சிறை

 


2014ம் ஆண்டு, இலங்கை தொடர்பாக நிலவிய கருத்துக்களை மாற்றியமைக்கும் நிமித்தம் அமெரிக்காவில் பாரிய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முகவராக நியமிக்கப்பட்டிருந்த நபருக்கு 15 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


இமாத் சுபேரி என அறியப்படும் குறித்த நபர் மீது வரி மோசடி மற்றும் வெளிநாட்டு முகவராக செயற்பட்டு அமெரிக்க அரசியலுக்குள் கருத்துக்களை விதைத்தல் மற்றும் வெளிநாடுகளின் பணத்தை அரசியலில் முதலிட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.


இவ்வழக்கில், இலங்கை தொடர்பில் நல்லெண்ணத்தை உருவாக்க இமாத் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டிருந்தமையும் இலங்கையிடமிருந்து குறித்த நபர் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment