நீதிமன்ற தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரி ரஞ்சன் மனு - sonakar.com

Post Top Ad

Tuesday 2 February 2021

நீதிமன்ற தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரி ரஞ்சன் மனு

 


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணயில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்று தற்போது அகுனகொலபெலஸ்ஸ சிறையிலடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனக்கெதிரான தீப்பை மீளாய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


சட்டத்தரணி விதான பத்திரன ஊடாக இம்மனுவைத் தாக்கல் செய்துள்ள ரஞ்சன், தனக்கெதிரான தீர்ப்பினை மீளாய்வு செய்து விடுவிக்குமாறு கோரியுள்ளார்.


இதேவேளை, ரஞ்சன் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னணியில் அவரது நாடாளுமன்ற இடம் வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் ஏலவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment