பவித்ராவுக்கு ஹிக்கடுவயில் சிகிச்சை - sonakar.com

Post Top Ad

Saturday 23 January 2021

பவித்ராவுக்கு ஹிக்கடுவயில் சிகிச்சை

 


கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சிகிச்சைக்காக ஹிக்கடுவ கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வரும் வரை வீட்டில் தனிமைப்பட்டிருந்த பவித்ரா, கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எனினும், அண்மையில் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்த தயாசிறி ஜயசேகர, பாரிய ஆபத்து அல்லது சிக்கல்கள் எதுவுமில்லாதவர்களை வீடுகளிலேயே தனிமைப்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமையும் கேகாலை தம்மிகவின் கொரோனா பானி அருந்தியும் பவித்ராவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment