நூதனசாலையாகிறது ஜே.ஆரின் வீடு! - sonakar.com

Post Top Ad

Tuesday 1 December 2020

நூதனசாலையாகிறது ஜே.ஆரின் வீடு!

 


கொழும்பு 7, வார்ட் பிளேசில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் வீட்டினை நூதனசாலையாக மாற்ற உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


வீட்டின் ஒரு பகுதியை சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துவதோடு புனர் நிர்மாணம் செய்து நூதனசாலையாக்குவதற்கு ஜே.ஆரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


சர்வதேச நிதியுதவியை பெறுவது குறித்தும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment